தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மீண்டும் மாற்றம்- மாணவர்களுக்கு குட் நியூஸ் வெளியானது!!
TN School Reopen Date 2024 Change Request News
TN School Reopen Date 2024 Change Request News தமிழகத்தில் ஜூன் 6ஆம் தேதி ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவித்திருந்தார்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

தமிழகத்தில் முன்னதாக புதிய கல்வியாண்டு தொடங்கினாலே ஜூன் ஒன்றாம் தேதி ஆரம்பமாகும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வருகின்ற கோடை வெப்பத்தின் காரணமாக பள்ளிகள் திறப்பது சற்று தாமதமாகி வருகிறது.
பொதுத்தேர்வு
தமிழகத்தில் இந்த ஆண்டு, பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. மக்களவைத் தேர்தலும் வந்ததால் இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தை விட முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு ஏப்ரல் 24ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டன.
இந்நிலையில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதால் மாணவர்கள் உயர்கல்வியில் சேர ஆயத்தமாகி வருகின்றனர். முன்னதாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வரலாறு காணாத வகையில் கோடை வெப்பத்தின் தாக்கம் நிலவி வந்தது.
அரசு வேலை வாய்ப்பு அறிவிப்பு 2024 -மாத ஊதியம் ரூ. 34,800 உடனே விண்ணப்பிங்க
TN School Reopen Date 2024 Change Request News
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என பல தரப்பிலிருந்து கூறப்பட்டு வருகிறது இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகளானது ஜூன் 6-ம் தேதி முதல் துவங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. கோடை வெப்பத்தின் தாக்கத்தினாலும் மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் நான்காம் தேதி வெளியிடப்படுவதினாலும் ஜூன் 6ஆம் தேதியிலிருந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க கோரிக்கை
இந்த நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பை மேலும் சில நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நிலவி வருகின்ற வரலாறு காணாத வெப்பம் நீங்கி தற்போது பல இடங்களில் போடும் கனமழையாது பெய்து வருகிறது பல மாவட்டங்களில் இதற்காக ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது காற்றழுத்த மாறுபாட்டினால் மேலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது .இந்த நிலையில் நிலையற்ற வானிலை நிலவுவதாலும் ஜூன் 6ஆம் தேதி வியாழக்கிழமை பள்ளி துவங்கினால் அடுத்து ஒரு நாள் தான் பள்ளியில் இயங்கும் என்பதாலும் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதியை மீண்டும் மாற்றம் செய்து ஜூன் 10ஆம் தேதி திங்கள்கிழமை முதல் பள்ளிகளை திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஜூன் 6ஆம் தேதி
இந்த காரணங்களை எல்லாம் கருத்தில் கொண்டு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதில் மாற்றம் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் பள்ளி திறப்பு தேதியில் மீண்டும் மாற்றம் வருமா என மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.