தமிழகத்தில் நாளை 10-ம் வகுப்பு பொது தேர்வு தொடக்கம்- தேர்வுத்துறை வெளியிட்ட அறிவுறுத்தல்!!
Tamil Nadu 10th Public Exam 2024 Tomorrow Start New Information
Tamil Nadu 10th Public Exam 2024 Tomorrow Start New Information தமிழக அரசு தேர்வு துறையானது நாளை பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியுள்ளதாக விவரங்களை வெளியிட்டுள்ளது. இத்துடன் தேர்வில் கலந்து கொள்ளு மாணவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்களையும் தெரிவித்துள்ளது அதைப் பற்றிய முழுமையான விவரங்களை கீழே பார்க்கலாம்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

தமிழகத்தில் 2023 -2024 பள்ளி ஆண்டுக்கான 10, 11 ,12 வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையானது கடந்த டிசம்பர் மாதம் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 7,72,000 மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளையும் 8 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்விலும், ஒன்பது லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்திருந்தது,
எனவே 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் தேர்வு தொடங்கி மார்ச் 22 ஆம் தேதியுடன் பொது தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்தது. மேலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4ஆம் தேதி தேர்வு தொடங்கி மார்ச் 25ஆம் தேதி ஆன இன்றுடன் பொதுத் தேர்வானது முடிய உள்ளது.
எனவே இந்நிலையில் மார்ச் 26 ஆம் தேதி ஆன நாளை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுக்கான 4107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இவற்றுடன் 28 ஆயிரம் தனித்தேர்வர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள்
பொதுத்தேர்வு தேர்வு அறைக்குள் செல்லும்போது செல்லும்போது செல்போன் போன்ற எலக்ட்ரிக் சாதன பொருட்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை.
தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடும் மாணவ மாணவிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் இதனால் இரண்டும் முதல் மூன்று ஆண்டுகள் தேர்வு எழுது தடை விதிக்கப்படும் என்று தேர்வு துறையானது எச்சரித்துள்ளது.
எனவே மாணவ மாணவிகள் தங்கள் திறமையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தேர்வு எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.