4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் முழு ஆண்டு தேர்வு தேதி மாற்றம்!- மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு!!
4 To 9 Annual Exam Date Again Change In Madurai
4 To 9 Annual Exam Date Again Change In Madurai தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வானது ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடத்த பள்ளி கல்வித்துறையானது முன்னதாக அறிவித்திருந்தது ஆனால் ரமலான் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு 4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் பத்தாம் தேதிக்கான தேர்வு ஏப்ரல் 22ஆம் தேதியும் ஏப்ரல் பன்னிரெண்டாம் தேதிக்கான தேர்வு ஏப்ரல் 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருந்தது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
![4 To 9 Annual Exam Date Again Change In Madurai](https://bossmedia.in/wp-content/uploads/2024/04/4-To-9-Annual-Exam-Date-Again-Change-In-Madurai-300x201.png)
இந்த நிலையில் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மதுரையில் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவின் கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே இதனை முன்வைத்து மதுரை மாவட்டத்திலுள்ள 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற இருக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வானது ஏப்ரல் 24ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா அவர்கள் தெரிவித்துள்ளார். எனவே மதுரையில் மட்டும் ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு சமூக அறிவியல் தேர்வு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.