தமிழகத்தில் பள்ளிகள் விடுமுறை தள்ளி போகுமா?- மாணவர்களுக்கு முக்கிய தகவல்!
TN School Reopen Extended New Update May 23
TN School Reopen Extended New Update May 23 தமிழகத்தில் கோடை விடுமுறையானது முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். தேதியை குறித்து பெற்றோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனைக்கு தயாராகி வருகிறது. அதன் அடிப்படையில் இன்னும் ஐந்து நாட்களில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

தமிழகத்தில் ஜூன் 2024 முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா என்று பெற்றோர்கள் மத்தியில் பெரும் கேள்வியாக மாறியுள்ளது. இதற்கு ஏற்ப தங்களது விடுமுறை கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் ஊருக்கு திரும்ப வேண்டி உள்ளது. எனவே வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு விடும்.கடந்த சில ஆண்டுகளாகவே வெயிலின் தாக்கமானது அதிகமாக இருப்பதால் அதற்கு ஏற்ப பள்ளிகள் திறப்பானது ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
வெயிலின் தாக்கம்
2023- 24 ஆம் ஆண்டு கல்வி ஆண்டு பொருத்தவரை ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதியும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ஆம் தேதியும் பள்ளிகள் ஆனது திறக்கப்பட்டன. இதேபோன்று வரும் 2024 25 ஆம் ஆண்டு கல்வியாண்டில் வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறப்பு தேதி ஆனது முடிவு செய்யப்படும். மே மாத தொடக்கத்திலிருந்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எனவே பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேற்பட்ட வெப்பநிலை பதிவானது இதனால் ஹிட் சோக் அபாயங்களும் ஏற்பட்டன.
தொடர் மழை
இதனைத் தொடர்ந்து ஜூன் இரண்டாவது மூன்றாவது வாரத்திற்கு பள்ளிகள் திறப்பு தள்ளிப் போய்விடும் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடும் அளவிற்கு நிலைமை தற்போது மாறி உள்ளது. இந்த சூழ்நிலையில் வெயிலின் தாக்கம் ஆனது பெரிதாக இல்லை என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. மேலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி வருகின்ற 27 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதலாக மிதமானதும் வரை மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீ கடைசி வாரத்தில் வானிலை நிலவரத்தை பொறுத்துதான் பள்ளிகள் திறப்பை முடிவு செய்ய முடியும்.
பள்ளிகள் திறப்பு எப்போது?
கர்நாடக மாநிலத்தில் மே 29ஆம் தேதியே பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 27ஆம் தேதி திங்களன்று பள்ளி கல்வித்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் ஆனது நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜூன் மாதம் எந்த தேதியில் பள்ளிகளை திறக்கலாம் என்று முடிவு செய்யப்படும் மேலும் பள்ளிகள் திறப்பை ஒட்டி மேற்கொள்ள வேண்டிய நாள் முன்னேற்பாடுகள் பற்றியும் ஆலோசித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நடப்பாண்டு தேர்தல் ஆண்டு என்பதால் 18 வது மக்களவையை தேர்வு செய்யும் முக்கியமான தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் முடிவானது ஜூன் 4ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வெளியாகின்றன.
எனவே அதன் பிறகு பள்ளிகள் திறக்க அதிகமான வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பார்த்தால் ஜூன் 5 அல்லது ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம்.