மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு 8,400 காலி பணியிடங்கள் வெளியான முக்கிய தகவல்!! TNEB New Notification 2024 Vacancy 8400

மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு 8,400 காலி பணியிடங்கள் வெளியான முக்கிய தகவல்!!

TNEB New Notification 2024 Vacancy 8400

TNEB New Notification 2024 Vacancy 8400 இந்த அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. TANGEDCO துறை அதிகாரிகள் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை அழைக்கின்றனர். தமிழ்நாடு அரசு வேலைகள் 2024 வரவிருக்கும் வேலைகளுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், தேர்வு செய்யும் முறை, எப்படி விண்ணப்பிப்பது குறித்து முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TNEB New Notification 2024 Vacancy 8400
TNEB New Notification 2024 Vacancy 8400
Organization Name Tamilnadu Electricity Board
Job Category Tamilnadu Govt Job 2024
Employment Type Upcoming Regular Jobs
Total Vacancies 59000+
New Vacancies 8400
Cancel Vacancies 5318 Posts
Eligibility All Over Tamilnadu

ரத்து காலியிடங்கள்

மதிப்பீட்டாளர் – 1300 பதவிகள்

உதவி பொறியாளர் – 600 பணியிடங்கள்

கள உதவியாளர் – 2900 பணியிடங்கள்

இளநிலை உதவியாளர் – 500 பணியிடங்கள்

மின்வாரியம் வெளியிட்ட நோட்டிபிகேஷன் 2024

மின்வாரியத்தில் 8000 கலப்பிரிவு ஊழியர்கள் 400 உதவி பொறியாளர்கள் என எட்டாயிரத்து நானூறு பேரை நியமிக்க தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியத்தில் உதவி பொறியாளர் கணக்கீட்டாளர் கள உதவியாளர் உள்ளிட்ட 289 பதவிகளில் 1.42 லட்சம் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாத நிலவரப்படி 82,022 பேர் பணிபுரிகின்றனர். அனைத்து பதவிகளிலும் சேர்த்து 59 ஆயிரத்து 801 பணியிடங்கள் காலியாக உள்ளன.

எனவே அப்பணியை நிரப்புவதற்கான நோட்டிபிகேஷன் ஆனது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது மின்சாதன பழுதை சரி செய்வதற்காக குறிப்பாக கலப்பிரிவில் 39 ஆயிரத்து 961 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு அதிகமான பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. எனவே புதிதாக ஊழியர்களை நியமிக்க மின்வாரியமானது முடிவு செய்துள்ளது.

மின்வாரிய தொழிலாளர்கள் பொறியாளர் ஐக்கிய சங்க பொதுச் செயலாளர் மு. சுப்பிரமணியன் அவர்கள் இது தொடர்பாக கூறியது என்னவென்றால் புதிய மின் இணைப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. இது தவிர பல்வேறு புதிய மின் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன அதற்கு ஏற்ப பணிகளை மேற்கொள்வதற்கான போதிய பணியாளர்கள் இல்லை என்பதால் இதனால் ஒருவரே இரண்டு, மூன்று வேலைகளை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 2200 பேர் ஓய்வு பெறுகின்றனர் எனவே தொடர்ந்து கோரிக்கையை எடுத்து கலப்பிரிவில் 8000 பணிகளுக்கு ஐடி, தொழில் பயிற்சி முடித்தவர்களும் 400 உதவி பொறியாளர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்யப்பட உள்ளன.

இதற்காக,
 மின்வாரியம் ஆனது அரசிடம் அனுமதி கேட்டுள்ளது புதிய பணியிடங்களால் ஏற்படும் செலவை சமாளிக்க மின்வாரியத்தில் ஏற்கனவே பல பதவிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.புதிய பணியாளர்களை தேர்வு செய்வதற்கு அரசு ஏற்கனவே அனுப்பிய கருத்துக்களை ஏற்காதது போல இந்த முறை செய்யக்கூடாது. விரைவில் ஒப்புதல் தர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

எனவே விரைவில் 8,400 காலி பணியிடங்களுக்கான நோட்டிபிகேஷன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

Leave a Comment

error: Content is protected !!