மாதம் ரூ.5000 கிடைக்கும் மத்திய அரசின் சூப்பர் திட்டம்!!.. உங்களுக்கு தெரியுமா?.. Atal Pension Yojana Scheme Full Details Tamil 2024 Happy News

மாதம் ரூ.5000 கிடைக்கும் மத்திய அரசின் சூப்பர் திட்டம்!!.. உங்களுக்கு தெரியுமா?..

Atal Pension Yojana Scheme Full Details Tamil 2024

Atal Pension Yojana Scheme Full Details Tamil 2024 மத்திய அரசு பல நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது அதில் ஒரு திட்டமான அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை குறித்து கீழ்க்கண்டவற்றில் நாம் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
Atal Pension Yojana Scheme Full Details Tamil 2024
Atal Pension Yojana Scheme Full Details Tamil 2024

நாட்டு மக்களுக்கு பொருளாதார மற்றும் சமூக பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு கொண்டு வந்த திட்டம்தான் அடல் பென்ஷன் யோஜனா.

இந்த திட்டம் பிரதமர் மோடியால் 2015-ல் தொடங்கப்பட்டது. அமைப்புசாரா துறையில் உள்ளவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக முதுமை காலத்தில் நிதியுதவி வழங்க இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சேருபவர்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறலாம்.

அடல் பென்ஷன் யோஜனா தினசரி ஊதியம் பெறுவோர், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் முறையான ஓய்வூதியத் திட்டம் இல்லாத சிறு வணிகர்களுக்கான இடைவெளியை நிரப்புகிறது. ஒரு திட்டத்தில் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறலாம்.
பலன் பெற விரும்பும் நபரின் வயதுக்கு ஏற்ப பிரீமியம் செலுத்தி ரூ.1000, ரூ.2000, ரூ.3000, ரூ.4000, ரூ.5000 ஓய்வூதியமாக பெறலாம். மேலும் இந்த திட்டத்தில் சேருவது எப்படி? யார் தகுதியானவர்கள்? இவை குறித்த விவரங்களை தெளிவாகப் பார்ப்போம்.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 60 வயதை கடந்த பிறகு ஓய்வூதியம் வழங்கும் வகையில் இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இதில் சேரலாம். விவசாயத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும். இத்திட்டத்தில் சேர்பவர்களுக்கு அதிகபட்சமாக மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியமாக மத்திய அரசு வழங்கும்.
செலுத்தப்படும் பிரீமியம் வாடிக்கையாளரின் வயதைப் பொறுத்து மாறுபடும். 18 வயது நிரம்பிய ஒருவர் சேர்ந்தால் மாதம் ரூ.42 முதல் ரூ.210 வரை செலுத்தலாம். 60 வயது வரை மாதம் ரூ.210 செலுத்தி வந்தால், ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ.5000 ஓய்வூதியம் கிடைக்கும்.
40 வயதான ஒருவர் மாதம் ரூ.1,454 பிரீமியம் செலுத்த வேண்டும். அப்போதுதான் மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் பெற முடியும். ஓய்வூதியம் குறைவாக இருந்தால் சரி என்று நினைத்தால் குறைந்த பிரீமியம் செலுத்தலாம். பிரீமியம் நிலை ரூ.291 முதல் ரூ.1,454 வரை உள்ளது.
சிறு வயதிலேயே இந்தத் திட்டத்தில் சேமிக்கத் தொடங்கினால், அதிக பலன்களைப் பெறலாம். முதலீடு செய்து நீண்ட கால பலன்களைப் பெற விரும்புவோருக்கு இது ஒரு நல்ல வழி.

Leave a Comment

error: Content is protected !!