வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை!!- தேர்தல் ஆணையர் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!!
Holiday on polling day Happy News Released by the Election Commissioner
Holiday on polling day Happy News Released by the Election Commissioner மக்களவை தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அன்று வாக்காளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதைப் பற்றிய முழு தகவலை இப்பதிவில் காணலாம்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
![Holiday on polling day Happy News Released by the Election Commissioner](https://bossmedia.in/wp-content/uploads/2024/03/Holiday-on-polling-day-Happy-News-Released-by-the-Election-Commissioner-300x201.png)
இந்தியாவின் மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பானது கடந்த மார்ச் 16ஆம் தேதி தேர்தல் ஆணைய தலைவர் சத்திய பிரதா சாகு அவர்களால் வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் இரண்டாம் தேதி வரை ஏழு கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் ஆனது நடைபெற உள்ளது. மனு தாக்கல் ஆரம்பித்து தேர்தல் நடைமுறைகள் விரைவில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்நிலையில் வாக்குப்பதிவு நாளின் போது ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என தேர்தல் ஆணைய தலைவர் அவர்கள் வேண்டுகோளை விடுத்துள்ளார்.
மேலும் இவ்விடுமுறையானது ஊதியத்துடன் விடப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். விடுமுறை தராத நிறுவனங்களின் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்யும் மேலும் அபராதம் விதிக்கும் எனவும் முன்பே கூறப்பட்டு இருந்தது அனைவருக்கும் தெரிந்தது. இதனை தொடர்ந்து வாக்குப்பதிவு நாள் அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு தனியார் நிறுவனங்களுக்கு கட்டளை இட வேண்டும். என தொழிலாளர் நல ஆணையத்திற்கு மாநில தேர்தல் ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் தேர்தல் அதிகாரிகளுக்கு அரசியல் கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையர் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
எனவே வாக்குப்பதிவு நாளில் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.