இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025!- தேர்வு கிடையாது
TNHRCE Recruitment 2025 Chennai
TNHRCE Recruitment 2025 Chennai : சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

இதற்கான கலவி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை அரசு வேலைவாய்ப்பு |
காலியிடங்கள் | 07 |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 05.02.2025 |
கடைசி தேதி | 07.03.2025 |
1. பதவியின் பெயர்: பரிசாரகர் / சுயம்பாகி
சம்பளம்: மாதம் ரூ.13,200 முதல் ரூ.41,800 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். கோயில் பழக்கவழக்கத்திற்கு ஏற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும். பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும்
2. பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்
சம்பளம்: மாதம் ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை
காலியிடங்கள்:
01
கல்வி தகுதி:
குறைந்தது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பதவியின் பெயர்: இரவு காவலர்
சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
4. பதவியின் பெயர்: திருவலகு
சம்பளம்:
மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை
காலியிடங்கள்:
04
கல்வி தகுதி:
தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.02.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.03.2025 மாலை 5.45 மணி வரை
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்ப படிவத்தினை https://hrce.tn.gov.in/ என்ற திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் குறிப்பிட்ட பணியிடத்திற்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்டு “செயல் அலுவலர், அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், அமைந்தகரை, சென்னை-29” என்ற முகவரிக்கு நேரிலோ / அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
மேலும் ரூ.35 மதிப்புள்ள அஞ்சல் விலை ஒட்டிய சுய விலாசம் இட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |